மீச்சிறு நினைவுக்கொடை

தமிழியல்கட்சிக்கு, கடவுளின் பொருளாதார வகை முயக்கம் வேண்டல்! 

இதுவரை நமக்குக் கிடைத்தது அனைத்தும் நாம் கடவுளிடம் கேட்டது மட்டுமே என்று தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் நிறுவியுள்ளனர். 

நம்முடைய செயல், எண்ணம், சொல் (தமிழ்மொழி) அனைத்தும், ஒவ்வொரு தற்பரை நேரமும் நமது கேட்பாக கடவுளிடம் பதிவாகி, அந்த வகைக்கு கடவுள் நம்மை முயக்குகிறது. 

இந்த அடிப்படையில் நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கிறோம் என்று நிறுவுகின்றனர் தமிழ்முன்னோர்.

செயல்அடிப்படையில்: நாம் கொடுப்பது அனைத்தும் கடவுளிடம் இருந்து நமக்கே முயக்கித்தரப்படுகிறது.

எண்ணஅடிப்படையில்: நாம் நினைப்பது அனைத்தும் கடவுளால் நமக்கு முயக்கித்தரப்படுகிறது.

மொழிஅடிப்படையில்: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் நேரடியாகவே கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம்.

தமிழியல்கட்சிக்கு, கடவுளின் பொருளாதார வகை முயக்கம் வேண்டும் பொருட்டு, செயல்அடிப்படையில்- தமிழியல்கட்சி முன்னெடுக்கும், தமிழியல்கட்சி உறுப்பினர்களுக்கு, மாதமீச்சிறு நினைவுக்கொடை வழங்கும் இயக்கம். இது பொருளாதார உதவித் திட்டம் அல்ல; தமிழியல்கட்சியின் தத்துவ நினைவுச் செயற்பாடு!

தமிழியல்கட்சியில் அண்மையில் இணைந்த நூறு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு தமிழ்மாதமும் ரூபாய் ஒன்று மீச்சிறு நினைவுக்கொடை வழங்கப்படும்.

தமிழியல்கட்சி உறுப்பினர்களின் இணைவுமுதன்மைப்பாட்டு அடிப்படையில், இந்த மீச்சிறு நினைவுக்கொடை, முந்தைய ஒவ்வொரு நூறு உறுப்பினர்களுக்கும் ரூபாய்இரண்டு, ரூபாய்மூன்று என்று உயர்ந்து கொண்டே போகும்.

வேறுவகையாகச் தெரிவித்தால்:

தமிழியல்கட்சியில் இணையும் முதல் நூறு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய்ஒன்று மீச்சிறு நினைவுக்கொடை வழங்கப்படும்.

தமிழியல்கட்சியில் நூற்று ஒன்றாவது உறுப்பினர் இணைந்து இருநூறாவது உறுப்பினர் இணையும்வரை முதலாவது நூறு உறுப்பினர்களுக்கு ரூபாய்இரண்டாக மீச்சிறு நினைவுக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.

தமிழியல்கட்சியில் இருநூற்று ஒன்றாவது உறுப்பினர் இணைந்து முந்நூறாவது உறுப்பினர் இணையும்வரை முதலாவது நூறு உறுப்பினர்களுக்கு ரூபாய்மூன்றாக மீச்சிறு நினைவுக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இரண்டாவது நூறு உறுப்பினர்களுக்கு வழங்கும் மீச்சிறு நினைவுக்கொடை ரூபாய்இரண்டாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழியல்கட்சியில் ஒவ்வொரு நூறு உறுப்பினர் உயரும்போதும் முந்தைய உறுப்பினர் அனைவருக்கும் வழங்கப்பட்டுவரும் மீச்சிறு நினைவுக்கொடையின் அளவில் ரூபாய்ஒன்று உயர்த்தி வழங்கப்படும்.

உறுப்பினர் எண் ஒன்றில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத முதலாவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் இரண்டில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத பனிரெண்டாவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் மூன்றில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத இருபத்திமூன்றாவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் நான்கில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத நான்காவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் ஐந்தில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத பதினைந்தாவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் ஆறில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத இருபத்தியாறாவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் ஏழில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத ஏழாவது நாளில் வழங்கப்படும்.

உறுப்பினர் எண் எட்டில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத பதினெட்டாவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் ஒன்பதில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத இருபத்தொன்பதாவது நாளில் வழங்கப்படும். 

உறுப்பினர் எண் சுழியத்தில் முடியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மீச்சிறு நினைவுக்கொடை தமிழ்மாத பத்தாவது நாளில் வழங்கப்படும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழியல்கட்சி